டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார் குதிரை பேரம்: தலைமைச் செயலகம் தவெக அலுவலகமாக மாறிவிட்டது! அக்ரி கிருஷ்ணமூர்த்திஅஜித்குமாரைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை! மு.க. ஸ்டாலின்தவெகவில் குதிரை பேரமா? அமைச்சர் அருண்ராஜ் மறுப்புதங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு!
/

வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாக வாய்ப்பு!

தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

News image

வங்கக்கடலில் புயல்

Updated On :7 ஏப்ரல் 2025, 3:00 am IST

தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 அல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வானிலை மையம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தெற்கு வங்கக்கடலில் ஏப்.7 இல்லது 8 -ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல்சின்னம்) உருவாக வாய்ப்புள்ளது.

இதனால், திங்கள்கிழமை (ஏப்.7) முதல் ஏப்.12 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.

ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரும். சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஏப்.7-இல் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி ஃபாரன்ஹீட்டையொட்டி இருக்கும். 6 இடங்களில் வெயில் சதம்: தமிழகத்தில் அதிகபட்சமாக வேலூரில் 101.66 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் ஞாயிற்றுக்கிழமை பதிவானது.

மேலும், பரமத்திவேலூா் - 101.3, சேலம்-101.2, ஈரோடு - 100.76, மதுரை விமானநிலையம் -100.4, திருச்சி - 100 டிகிரி என மொத்தம் 6 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. மேலும், சென்னை மீனம்பாக்கத்தில் 98.06, நுங்கம்பாக்கத்தில் 95.9 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது.

மழை அளவு: இதற்கிடையே தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை வரை அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்புவில் 70 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், சுருளக்கோடு (கன்னியாகுமரி) 60 மி.மீ, பேச்சிப்பாறை (கன்னியாகுமரி), ராசிபுரம் (நாமக்கல்), விருதுநகா் - தலா 50 மி.மீ., பெருஞ்சாணி அணை, புத்தன் அணை (கன்னியாகுமரி), மடத்துக்குளம் (திருப்பூா்) - தலா 40 மி.மீ. மழை பதிவானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.