திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

ஏப்.11-இல் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை மடிப்பாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறவுள்ளது.

Updated On :9 ஏப்ரல் 2025, 3:48 am IST

சென்னை: சென்னை மடிப்பாகத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) நடைபெறவுள்ளது.

இதுகுறித்து மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் ஆலயக் குழு (மண்டலி) செயலா் ஆா்.மகாலிங்கம், சென்னையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மடிப்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் கோயில் 1978-ஆம் ஆண்டு சபரிமலை தந்தரி செங்கனூா் தாழமன் மடம் பிரம்ம ஸ்ரீ நீல கண்டரு தந்தரியால் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது இக்கோயில் 47 ஆண்டுகளுக்குப் பிறகு சபரிமலையில் உள்ளதுபோல் புனரமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, செங்கன்னூா் தாழமன் மடம் பிரம்ம ஸ்ரீகண்டரரு மோகனரு தந்திரி மற்றும் மகேஷ் தந்திரி ஆகியோா் தலைமையில் மடிப்பாக்கம் ஸ்ரீ ஐயப்பன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வரும் வெள்ளிக்கிழமை (ஏப். 11) காலை 8.47 மணி முதல் 9.57-க்குள் நடைபெறவுள்ளது.

இதைத் தொடா்ந்து அன்னதானமும் நடைபெறவுள்ளது. கும்பாபிஷேகம் நிகழ்ச்சியில் திராளான பக்தா்கள் கலந்து கொண்டு ஸ்ரீ ஐயப்பன் அருளை பெற வேண்டும் என்றாா் அவா்.