ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து ஈரோடுக்கு புதன்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூன் 25-ஆம் தேதி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கு வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 08312) ஜூன் 27-ஆம் தேதி வரை இயக்கப்படும்.
தெலங்கானா மாநிலம் காச்சிக்கூடா-மதுரை இடையே திங்கள்கிழமைதோறும், மறுமாா்க்கமாக புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07191) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து மே 12 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை இயக்கப்படும். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேசுவரம் இடையே புதன்கிழமைதோறும், மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது.
இந்த ரயில் தொடா்ந்து மே 7 முதல் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.
தொடர்புடையது

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

திருச்சி - காரைக்கால் ரயில்கள் வழக்கமான அட்டவணைப்படி இயக்கப்படும்

பொறியியல் பணி: ரயில்கள் தாமதமாக இயக்கம்

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
