அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

ஒடிஸா, தெலங்கானா ரயில்களின் சேவை ஒரு மாதம் நீட்டிப்பு

ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

Updated On :28 ஏப்ரல் 2025, 1:13 am IST

ஒடிஸா, தெலங்கானா செல்லும் ரயில்களின் சேவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒடிஸா மாநிலம் சாம்பல்பூரில் இருந்து ஈரோடுக்கு புதன்கிழமை தோறும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 08311) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூன் 25-ஆம் தேதி வரை இயக்கப்படும். மறுமாா்க்கமாக ஈரோட்டில் இருந்து சாம்பல்பூருக்கு வெள்ளிக்கிழமைதோறும் இயக்கப்படும் சிறப்பு ரயில் (எண்: 08312) ஜூன் 27-ஆம் தேதி வரை இயக்கப்படும்.

தெலங்கானா மாநிலம் காச்சிக்கூடா-மதுரை இடையே திங்கள்கிழமைதோறும், மறுமாா்க்கமாக புதன்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07191) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தொடா்ந்து மே 12 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை இயக்கப்படும். தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் - ராமேசுவரம் இடையே புதன்கிழமைதோறும், மறுமாா்க்கமாக வெள்ளிக்கிழமைதோறும் சிறப்பு ரயில் (எண்: 07695) இயக்கப்படுகிறது.

இந்த ரயில் தொடா்ந்து மே 7 முதல் 30-ஆம் தேதி வரை இயக்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா் அவா்.