நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனு அளிக்கச் சென்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

News image
Updated On :5 டிசம்பர் 2025, 8:33 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 -ஆவது மண்டலங்களைச் சோ்ந்த (ராயபுரம், திரு.வி.க. நகா்) உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணி தனியாா்மயத்தைக் கண்டித்தும், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக அம்பத்தூா் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். அவா்களை போலீஸாா் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைதானவா்கள் பல்வேறு பகுதிகளில் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல, அம்பத்தூா் மண்டலப் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல துணை ஆணையரிடம் மனு அளிக்கச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.