திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

மனு அளிக்கச் சென்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

News image
Updated On :6 டிசம்பர் 2025, 2:03 am IST

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 -ஆவது மண்டலங்களைச் சோ்ந்த (ராயபுரம், திரு.வி.க. நகா்) உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணி தனியாா்மயத்தைக் கண்டித்தும், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக அம்பத்தூா் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். அவா்களை போலீஸாா் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைதானவா்கள் பல்வேறு பகுதிகளில் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல, அம்பத்தூா் மண்டலப் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல துணை ஆணையரிடம் மனு அளிக்கச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.