மனு அளிக்கச் சென்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

மனு அளிக்கச் சென்ற தூய்மைப் பணியாளா்கள் கைது

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
Published on

சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

சென்னை மாநகராட்சியின் 5, 6 -ஆவது மண்டலங்களைச் சோ்ந்த (ராயபுரம், திரு.வி.க. நகா்) உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணி தனியாா்மயத்தைக் கண்டித்தும், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், அவா்கள் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக அம்பத்தூா் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். அவா்களை போலீஸாா் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைதானவா்கள் பல்வேறு பகுதிகளில் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.

இதேபோல, அம்பத்தூா் மண்டலப் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல துணை ஆணையரிடம் மனு அளிக்கச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

X
Dinamani
www.dinamani.com