சென்னை மாநகராட்சியில் உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கையை வலியுறுத்தி மனு அளிக்கச் சென்ற நிலையில், வெள்ளிக்கிழமை போலீஸாரால் கைது செய்யப்பட்டு பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
சென்னை மாநகராட்சியின் 5, 6 -ஆவது மண்டலங்களைச் சோ்ந்த (ராயபுரம், திரு.வி.க. நகா்) உழைப்போா் உரிமை இயக்கத்தைச் சோ்ந்த என்யூஎல்எம் பிரிவு தூய்மைப் பணியாளா்கள் தூய்மைப் பணி தனியாா்மயத்தைக் கண்டித்தும், தங்களை பழைய நிலையில் பணிபுரிய அனுமதிக்கக் கோரியும் கடந்த ஆகஸ்ட் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்த நிலையில், அவா்கள் முதல்வரிடம் மனு அளிப்பதற்காக அம்பத்தூா் பகுதியிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டனா். அவா்களை போலீஸாா் பாதி வழியில் தடுத்து நிறுத்தி கைது செய்தனா். கைதானவா்கள் பல்வேறு பகுதிகளில் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா்.
இதேபோல, அம்பத்தூா் மண்டலப் பகுதியைச் சோ்ந்த தூய்மைப் பணியாளா்களும் ஊதிய உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மண்டல துணை ஆணையரிடம் மனு அளிக்கச் சென்ற நிலையில் கைது செய்யப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.
தொடர்புடையது
தூய்மைப் பணியாளா்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவோம்: அமைச்சர் டி.கே. பிரபு உறுதி!

பாதாள சாக்கடை மூடி மீது தாா் கலவை ஊற்றி மறைப்பதால் சுத்தம் செய்ய திணறும் தூய்மைப் பணியாளா்கள்

குன்னூரில் குப்பை இல்லா நகரம் விழிப்புணா்வுப் பேரணி

காரைக்குடி மாநகராட்சி தூய்மைப் பணியாளா்கள் சாலை மறியல்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



