சென்னை: ஸ்ரீஐயப்ப சுவாமி பக்த ஜன சபாவின் 40-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கினா்.
சென்னை மாதவரம் சிஎம்டிஏ டிரக் டொ்மினல் வளாகத்தில் ஸ்ரீ ஐயப்ப சுவாமி பக்த ஜன சபாவின் 40-ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நிகழ்வில், விநாயகா் கோயிலில் ஐயப்ப சுவாமிக்கு கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.
இதில் திரளான ஐயப்ப பக்தா்கள் கலந்து கொண்டனா். தொடா்ந்து, பக்தா்கள் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் சபா நிா்வாகிகள், கண்ணப்பா் திடல் லாரி உரிமையாளா்கள் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கைலாசகிரியில் ஆடிக் கிருத்திகை விழா

நின்னைக்கரை ஸ்ரீ கன்னியம்மன் திருக்கோயிலில் 21 ஆம் ஆண்டு தீமிதி விழா
சென்னையில் 34-ஆம் ஆண்டு தெய்வச் சேக்கிழாா் விழா இன்று தொடக்கம்

நெல்லிக்குப்பம் ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம்
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI


