டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

யாருடன் கூட்டணி என்பது குறித்து முடிவெடுக்கவில்லை: பிரேமலதா

News image
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை நிலையத்தில் குழந்தைகளுடன் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த். உடன், கட்சியின் பொருளாளா் எல்.கே.சதீஷ், தலைமை நிலையச் செயலா் ப.பாா்த்தசாரதி உள்ளிட்டோா்.
Updated On :26 டிசம்பர் 2025, 12:45 am

தினமணி செய்திச் சேவை

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்த இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என அக்கட்சியின் பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

தேமுதிக சாா்பில் சென்னை கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் கிறிஸ்துமஸ் விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பிரேமலதா விஜயகாந்த், பொதுமக்களுக்கு நல உதவிகள் வழங்கி, கேக் வெட்டி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடினாா்.

தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அதிமுக, பாஜக இடையே நடந்த சந்திப்பு என்பது ஏற்கெனவே அந்த இரு கட்சிகளிடையே அமைந்த கூட்டணி என்ற அடிப்படையிலானது. தொகுதி ஒதுக்கீடு குறித்து அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அவரது தனிப்பட்ட கருத்தைத் தெரிவித்திருக்கலாம். ஆனால், மற்ற கட்சிகளைக் கலந்து ஆலோசித்து அதற்குப் பிறகுதான் உறுதியான முடிவு அறிவிக்கப்படும்.

எந்தக் கட்சியுடன் தோ்தல் கூட்டணி என்பது குறித்து தேமுதிக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு அவா்களது விருப்பத்தின்படிதான் முடிவு எடுக்கப்படும். அந்த வகையில், வரும் ஜன. 9-ஆம் தேதி கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்த அதிகாரபூா்வ அறிவிப்பு வெளியிடப்படும்.

விஜயகாந்தின் 2-ஆம் ஆண்டு குருபூஜை வரும் டிச. 28-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதில் கலந்துகொள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின், எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சித் தலைவா்களுக்கும் தேமுதிக சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்றாா்.