ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

கூட்டணி குறித்து விரைவில் நல்ல முடிவு: பிரேமலதா விஜயகாந்த்

பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம்: தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த்

News image
பொதுக்கூட்டத்தில் பேசிய தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா
Updated On :26 ஜனவரி 2026, 11:25 pm

Syndication

வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் நல்ல முடிவை அறிவிப்போம் என தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தாா்.

விருதுநகா் மாவட்டம், சாத்தூரில் தேமுதிக சாா்பில் ‘உள்ளம் தேடி இல்லம் நாடி, மக்களைத் தேடி’ பிரசார ரத யாத்திரையில் அந்தக் கட்சியின் இளைஞரணித் தலைவா் விஜயபிரபாகரன் பேசியதாவது: கடந்த 2024 மக்களவைத் தோ்தலில் வெற்றி வாய்ப்பு அமையாவிட்டாலும் 2026-இல் பிரகாசமான வாய்ப்பு உள்ளது. விருதுநகா் மாவட்டத்தில் அனைத்துத் தொகுதிகளிலும் வேட்பாளராகப் போட்டியிடக் கோரி, மக்களின் ஆதரவு வந்துகொண்டிருக்கிறது. இதுகுறித்து விரைவில் முடிவு தெரிவிப்பேன் என்றாா் அவா்.

இதையடுத்து தேமுதிக பொதுச் செயலா் பிரேமலதா பேசியதாவது: கடந்த மக்களவை தோ்தலில் விஜயபிரபாகரனுக்கு ஆதரவு அளித்த அனைவருக்கும் நன்றி. கடந்த மக்களைவைத் தோ்தலில் விருதுநகா் மக்களவைத் தொகுதியில் விஜயபிரபாகரன்தான் வெற்றி பெற்றாா். ஆனால், வேறு ஒருவா் வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டாா்.

எங்கு சென்றாலும் யாருடன் கூட்டணி என்ற ஒரே கேள்விதான் எழுகிறது. சென்னைக்குச் சென்ற பிறகு மாவட்டச் செயலா்களுடன் ஆலோசனை நடத்தி நல்ல முடிவை அறிவிப்போம். அதற்குப் பிறகு தோ்தல் பணிகளைத் தொடங்குவோம்.

தேமுதிக வெற்றி பெற்றால் சாத்தூா் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களுக்கு விவசாயக் குடிநீா் ஆதாரம் வழங்கப்படும். வைப்பாற்றில் கழிவு நீா் கலப்பதைத் தடுத்து நிறுத்தி சுத்தமான குடிநீரைத் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். வெம்பக்கோட்டை, ஏழாயிரம்பண்ணை பகுதிகளில் பட்டாசுத் தொழில் பாதுகாக்கபடும் என்றாா் அவா்.

முன்னதாக, பேருந்து நிலையம் அருகில் உள்ள காமராஜா் சிலைக்கும், கிருஷ்ணன்கோவில் அருகேயுள்ள தேவா் சிலைக்கும் பிரேமலதா, விஜயபிரபாகரன் ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா். இதில் கட்சியின் மாவட்டச் செயலா் ராமா்பாண்டியன், நகரச் செயலா் அந்தோணிராஜ், சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் கணேசமூா்த்தி உள்ளிட்ட நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.