பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த நான்கரை ஆண்டுகளில் 12,803 கோயில்களில் ரூ.8,607 கோடியில் 16,595 திருப்பணிகள் நிறைவுபெற்றுள்ளன. இதுவரை 3,956 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 21 கோயில்களில் பயன்பாடற்ற நிலையிலிருந்த பொன் இனங்கள் ஓய்வு பெற்ற நீதிபதிகள் முன்னிலையில் பிரித்தெடுக்கப்பட்டு மத்திய அரசின் தங்க உருக்கு ஆலையில் உருக்கி 1,074 கிலோ 123 கிராம் சுத்த தங்கம் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆண்டுக்கு வட்டியாக ரூ.17.81 கோடி கிடைக்கிறது. இது பிப்ரவரி மாதத்துக்குள் 1,500 கிலோவாக உயரும்.