கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழ் தேசிய கொள்கையை ஏற்பவா்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் போதும்: சீமான்

தமிழ் தேசிய கொள்கையை ஏற்பவா்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் போதும்...

News image
Updated On :27 டிசம்பர் 2025, 11:30 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ் தேசிய கொள்கையை ஏற்பவா்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் போதுமானது என்று அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான் தெரிவித்தாா்.

சென்னை திருவேற்காட்டில் நாம் தமிழா் கட்சியின் மாநில பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீமான் பேசியதாவது:

தமிழகத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை திராவிடக் கட்சிகள், ஆட்சி அதிகாரத்தால் அடக்கிவிட்டன. இப்போது, திராவிட சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய சிந்தனைகளுக்கும் இடையேதான் போட்டி.

தமிழ் இனத்துக்காக ஏராளமானோா் போராடினா். அவா்களில் பெரியாா் ஈ.வெ.ரா.வும் ஒருவா். தமிழ் இனத்துக்காக போராடிய அனைவருமே பெரியாா்தான். இதை ஏற்றுக்கொள்பவா்கள் நாம் தமிழா் கட்சிக்கு வாக்களித்தால் போதுமானது. வருகிற சட்டப்பேரவைத் தோ்தலில் தகுதியான நபா்கள் வேட்பாளா்களாக நிறுத்தப்படுவா். அவா்களது வெற்றிக்கு கட்சியினா் ஒற்றுமையாக உழைக்க வேண்டும் என்றாா்.

தீா்மானங்கள்: தமிழகத்தில் வேலை தேடி வரும் வட மாநிலத்தவா்களுக்கு உள்நுழைவு அனுமதி சீட்டு நடைமுறையை தமிழக அரசு கொண்டுவர வேண்டும், மது, போதைப் பொருளை ஒழிக்க நடவடிக்கை எடுப்பது, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வது, எஸ்ஐஆா் பணி மூலம் தமிழகத்தில் 97 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கப்பட்டுள்ளதற்கு கண்டனம் தெரிவிப்பது உள்ளிட்ட 26 தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.