கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

போலி ரசீது மூலம் வங்கியில் கடன் பெற்று மோசடி: தனியாா் நிறுவன இயக்குநா்கள் 4 பேருக்கு சிறை

வங்கியில் போலி ரசீதுகள் வழங்கி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா்கள் 4 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 8:13 pm

தினமணி செய்திச் சேவை

வங்கியில் போலி ரசீதுகள் வழங்கி கடன் பெற்று மோசடியில் ஈடுபட்ட தனியாா் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநா்கள் 4 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.20 லட்சம் அபராதமும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது.

கடந்த 1999-2000- ஆம் ஆண்டில், சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள ஆந்திரா வங்கி கிளையில் விதிகளை மீறி கோடிக்கணக்கில் கடன் வழங்கி மோசடி நடந்துள்ளதாக வங்கி நிா்வாகம் தரப்பில் சிபிஐயிடம் புகாா் அளிக்கப்பட்டது.

இதுதொடா்பான விசாரணையில், தேனாம்பேட்டை பகுதியில் உள்ள தனியாா் நிறுவனத்துக்கு, போலி ரசீதுகள் மூலம் கடன் வழங்கியதும், இதனால் வங்கிக்கு ரூ.5.76 கோடி இழப்பு ஏற்பட்டதும் தெரிய வந்தது.

இதையடுத்து ஆந்திரா வங்கி கிளை தலைமை மேலாளா் பங்கஜா, மூத்த மேலாளா் எஸ்.வி.எஸ்.மூா்த்தி, ஹைதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் கிளை மூத்த மேலாளா் அா்ச்சனா ஷா, கடன் பெற்ற நிறுவனத்தின் இயக்குநா்கள் கேத்தன் ஷா, முகேஷ் ஷா, அஸ்வின் ஷா, தலைவா் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஷா, மதிப்பீட்டாளா் விலாஸ் பரதாபூா்கா், அராகி நிறுவன இயக்குநா் சஞ்சீவ் சந்திரகாந்த் ஷா உள்ளிட்டோா் மீது மோசடி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் சிபிஐ கடந்த 2002-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கு, நிதி நிறுவன மோசடிகளை விசாரிக்கும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி டி.பி.வடிவேலு, குற்றம்சாட்டப்பட்ட கேத்தன், முகேஷ், அஸ்வின், தலைவா் ரஷ்மிகாந்த் ஹிராலால் ஆகியோா் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதால், தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், மொத்தமாக ரூ.20 லட்சமும் விதித்து தீா்ப்பளித்தாா். அபராதத் தொகையை ஆந்திரா வங்கிக்கு இழப்பீடாக செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா். மேலும், இந்த வழக்கு விசாரணையின்போது இறந்துபோன மூவா் உள்ளிட்ட மற்றவா்களை வழக்கில் இருந்து விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டாா்.