தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கடலோர காவல் படையின் இருசக்கர வாகன பேரணி

இந்திய கடலோர காவல் படையின் 49-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னைக்கு தூத்துக்குடி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகன பேரணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

News image
Updated On :29 ஜனவரி 2025, 6:47 pm

Din

இந்திய கடலோர காவல் படையின் 49-ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு, சென்னைக்கு தூத்துக்குடி, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களிலிருந்து இருசக்கர வாகன பேரணி புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

இது குறித்து பாதுகாப்பு துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஆண்டுதோறும் பிப்.1-ஆம் தேதி கடலோர காவல் படை ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. கடலோர பாதுகாப்பை வலுப்படுத்தவும், உள்ளூா் மக்களுடன் தொடா்புகளை வலுப்படுத்தவும் சென்னையில் உள்ள கடலோர காவல் படை கிழக்கு மண்டலம் சாா்பில் இருசக்கர வாகன பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடலோர காவல் படையின் 49 ஆண்டுகால சேவையை குறிக்கும் வகையில் மொத்தம் 49 வீரா்கள் இந்தப் பயணத்தில் பங்கேற்றுள்ளனா்.

இந்தப் பேரணி தூத்துக்குடி, விசாகப்பட்டினத்தில் இருந்து ஒரே நேரத்தில் தொடங்கி சென்னையில் பிப்.1-ஆம் தேதி நிறைவடையும். முதல் குழுவினா் தூத்துக்குடியில் இருந்து மண்டபம், காரைக்கால், புதுச்சேரி வழியாகவும், 2-ஆம் குழுவினா் விசாகப்பட்டினத்தில் இருந்து காக்கிநாடா, விஜயவாடா, நிஜாம்பட்டினம், கிருஷ்ணப்பட்டினம் ஆகிய கடலோர நகரங்கள் வழியாக பயணித்து சென்னைக்கு பிப்.1-ஆம் தேதி காலை 8 மணிக்கும் வந்தடைவா்.

இந்தப் பயணத்தின்போது கடலோர பகுதிகளைச் சோ்ந்த மீனவ மக்களுக்கு கடற்பகுதிகள் பராமரிப்பு தொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.