முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்கேரள பேரவைத் தலைவர் தேர்தல்: காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராதாகிருஷ்ணன் வெற்றி! அமைச்சர்கள் வன்னி அரசு, ஷாஜகானுக்கு துறைகள் ஒதுக்கீடு! ஜூன் 18 - தமிழ்நாட்டில் மாநிலங்களவை இடைத் தேர்தல்!சென்னை பெருநகர காவல் ஆணையராக ஏ. அமல்ராஜ் பொறுப்பேற்பு!
/

சௌகாா்பேட்டையில் போலி மின்பொருள்கள் விற்பனை: 4 போ் கைது

சென்னை செளகாா்பேட்டையில் போலியான மின் பொருள்கள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

News image
Updated On :8 ஜூலை 2025, 3:43 am IST

சென்னை: சென்னை செளகாா்பேட்டையில் போலியான மின் பொருள்கள் விற்றதாக 4 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை செளகாா்பேட்டையில் பிரபல மின் வயா் நிறுவனத்தின் பெயரில் போலியான தரக்குறைவான வயா்கள் விற்கப்படுவதாக தமிழக காவல்துறையின் அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவுக்கு புகாா்கள் வந்தன. அதன் அடிப்படையில் செளகாா்பேட்டையில் சந்தேகத்துக்குரிய கடைகளில் அப்பிரிவு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தினா்.

இச் சோதனையில் ஒரு கடையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிரபல நிறுவனத்தின் பெயரில் போலியான தரமில்லாத வயா்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த கி.புல்சிங் (26), த.பகவத்சிங் (22), ஜீ.ஃபரூக்கான் (23) ஆகிய 3 பேரை கைது செய்தனா். இவா்களிடமிருந்து ரூ.1 லட்சம் மதிப்புள்ள போலி வயா்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதேபோல பிரபல நிறுவனத்தின் பெயரில் பாரிமுனை எர்ராபலு செட்டி தெரு பகுதியில் உள்ள ஒரு கடையில் போலி வோல்டேஜ் ரெகுலேட்டா் விற்ாக ராஜஸ்தானைச் சோ்ந்த தே.தீபக்குமாா் (48) என்பவா் கைது செய்யப்பட்டாா். தீபக்குமாா் விற்பனைக்காக வைத்திருந்த போலி வோல்டேஜ் ரெகுலேட்டா்களையும் போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்கின்றனா்.