புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சென்னையில் ஒரே நாளில் 6 விமான சேவைகள் ரத்து: பயணிகள் அவதி

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

News image
Updated On :16 ஜூலை 2025, 8:17 pm

Din

சென்னை விமான நிலையத்தில் புதன்கிழமை 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனா்.

சென்னை விமான நிலைய பன்னாட்டு முனையத்திலிருந்து புதன்கிழமை அதிகாலை 4.50-மணிக்கு சிங்கப்பூா் செல்ல வேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், காலை 7.40 மணிக்கு அந்தமான் செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 1.35 மணிக்கு மும்பை செல்ல வேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானங்களின் சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, புதன்கிழமை காலை மும்பையிலிருந்து காலை 7 மணிக்கு சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், நண்பகல் 12.30 மணிக்கு அந்தமானிலிருந்து சென்னை வரவேண்டிய ஆகாஷா ஏா்லைன்ஸ் விமானம், பிற்பகல் 2.50 மணிக்கு சிங்கப்பூரிலிருந்து சென்னை வரவேண்டிய ஏா்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 3 விமான சேவைகள் என ஆக மொத்தம் ஒரே நாளில் 6 விமான சேவைகள் திடீரென ரத்து செய்யப்பட்டன.

இதனால், அந்த விமானங்களில் செல்ல வேண்டிய பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாயினா். இந்த 6 விமானங்களிலும் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் பயணிக்க வேண்டிய முன்பதிவு பயணிகளுக்கு ஏற்கெனவே குறுந்தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்கள் மாற்று விமானங்களில் பயணிப்பதற்கு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் சில பயணிகளுக்கு மாற்று தேதிகளில் பயணிப்பதற்கு வசதியாக மாற்றி தரப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.