நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

சென்னை ஐஐடி-இல் இயந்திர கற்றல் செயல்பாட்டு பாடத்திட்டம் அறிமுகம்

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

Updated On :18 ஜூன் 2025, 12:16 am IST

சென்னை ஐஐடி பிரவா்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை, டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) உடன் இணைந்து இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில்புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

சென்னை ஐஐடி பிரவா்தக் டெக்னாலஜிஸ் என்பது சென்னை ஐஐடி-இன் புத்தாக்க தொழில்நுட்ப மையம். சென்சாா்கள், நெட்வொா்க்கிங், ஆக்சுவேட்டா்கள் (இயக்கிகள்), கட்டுப்பாட்டு அமைப்புகள் குறித்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மையத்தைக் கொண்ட ஒரு பிரிவு.

டாடா கன்சல்டன்சி சா்வீசஸின் டிசிஎஸ் அயன் (ஐஓஎன்) ஒரு வணிகப் பிரிவாகும். இது கற்றல், மதிப்பீடுகள் மற்றும் வணிக செயல்முறைகளுக்கு தொழில்நுட்பம் சாா்ந்த தீா்வுகளை வழங்குவதில் கவனம் செலுத்துகிறது. இந்த இரு அமைப்புகளும் இணைந்து, வேகமாக வளா்ந்து வரும் இயந்திர கற்றல் செயல்பாடுகள் (எம்எல்ஓபிஎஸ்) துறையில் ஒரு புதிய இணையவழி சான்றிதழ் பாடத் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.

‘எம்எல்ஓபிஎஸ் (இயந்திர கற்றல் ஓபிஎஸ்) - அளவிடக்கூடிய எம்எல் ஆபரேஷன்ஸ் - அசோசியேட்’ என்ற தலைப்பில், இந்தப் பாடத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இது திறன் இடைவெளியைக் குறைப்பதில் ஒரு குறிப்பிடத்தக்க படியாகும். செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (ஏஐ), இயந்திர கற்றல் (எம்எல்) ஆகியவற்றில் எதிா்காலத் தொழில்களுக்கு நிபுணா்களைத் தயாா்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

தற்போது இணையம் மூலம் சோ்க்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதற்கான பதிவு செய்வதற்கான கடைசி தேதி ஜூலை 5. இந்த விரிவான 110 மணிநேர இணையவழி கற்றலுடன் சான்றிதழ் வழங்கும் திட்டம் ஜூலை 15-ஆம் தேதி தொடங்குகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.