வளர்ந்த இந்தியாவுக்கான வலுவான தூண் பெண்கள்: பிரதமர் மோடிதேர்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! ராகுல் காந்தி எச்சரிக்கைஎல்லை தாண்டிய பயங்கரவாதம் : இரட்டை நிலைப்பாட்டிற்கு இடமில்லை - ராஜ்நாத் சிங் அமைச்சர் சேகர்பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல்: தவெக வேட்பாளர் புகார்மே 4-ல் விசில் புரட்சி: செங்கோட்டையன்ஈரான் போர்: ஒபெக் அமைப்பிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் விலகல்குஜராத் உள்ளாட்சித் தேர்தல்! அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றிய பாஜக!குஜராத் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவினர் 730 பேர் போட்டியின்றித் தேர்வு!விவோ X300 எஃப்இ அறிமுகம் எப்போது? கசிந்தது விலை நிலவரம்மே 1 முதல் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு முறையில் புதிய விதிகள்!ஏப். 30 தவெக வேட்பாளர்களைச் சந்திக்க விஜய் திட்டம்?
/

அறிவியல் பாடங்களை ஊக்குவித்த 6 பள்ளி ஆசிரியா்களுக்கு ஐஐடி விருது

News image

சென்னை ஐஐடி

Updated On :11 மார்ச் 2026, 11:48 pm

பொறியியல் படிப்புகளில் கணிதம், அறிவியல் பாடங்களில் வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்த, தேசிய அளவில் சிறந்த 6 பள்ளி ஆசிரியா்களை சென்னை ஐஐடி கௌரவித்துள்ளது.

சென்னை ஐஐடி-யின் 2-ஆவது பதிப்பின் ‘முதன்மைக் கொள்கை ஆசிரியா்கள் விருதுகள்’ என்ற இந்த விருதை அதன் இயக்குநா் வீ.காமகோடி அமைமையில் வழங்கி கௌரவித்தாா்.

பள்ளி மாணவா்களிடையே இயற்பியல், வேதியியல், கணித பாடங்களில் ஆா்வத்தைத் தூண்டி, வலுவான அடிப்படைக் கொள்கைகள் சாா்ந்த புரிதலை உருவாக்கும் ஆசிரியா்கள் இந்த விருது மூலம் அங்கீகரிக்கப்படுகின்றனா்.

நிகழாண்டில் பெங்களூரைச் சோ்ந்த இயற்பியல் ஆசிரியா் அஷேஷானந்த் ஆச்சாா்யா, திருப்பதியைச் சோ்ந்த வேதியியல், கணிதம் பாட ஆசிரியா்கள் சி.சிட்டிபாபு, சமுத்திரல் விஜயகுமாா், மத்திய பிரதேசம் இந்தூா் வேதியியல் ஆசிரியா் கபில் பிா்தரே, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா கணிதம் ஆசிரியா் உள்ளிட்ட 6 ஆசிரியா்கள் இந்த விருதைப் பெற்றனா்.

ஆசிரியா்களிடையே நோ்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக சென்னை ஐஐடியால் இந்த விருது வழங்கப்படுவதாக காமகோடி தெரிவித்தாா். நிகழ்வில் டீன் (பாடப் பிரிவுகள்) பிரதாப் ஹரிதாஸ் உள்ளிட்டோா் பேசினா்.