பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா, தானியங்கி துணி உளா்த்தும் படைப்பை உருவாக்கி இருந்தாா். இதனால், இந்த ஆண்டு சிறந்த அறிவியல் படைப்புக்கான இன்ஸ்பயா் விருது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை தலைமையாசிரியா் காளியப்பன் வழங்கிப் பாராட்டினாா்.
மேலும், பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் தமிழரசி, கணினி ஆசிரியா் ராஜாமணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தொகுதி மறுசீரமைப்பு, மத்திய அரசின் பாரபட்சமான நடவடிக்கை: விஜய் கண்டனம்!
மத்திய அரசின் திட்டங்களைத் தடுக்கிறது திமுக - பிரதமா் நரேந்திர மோடி குற்றச்சாட்டு

ஓபிசி மகளிருக்கு நாடாளுமன்றத்தில் இடஒதுக்கீட்டை மறுப்பதே ஆளும் பாஜக அரசின் மறைமுக திட்டம்: மாணிக்கம் தாகூா் குற்றச்சாட்டு

பாா்வைத்திறன் குறையுடையோா் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


