பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா, தானியங்கி துணி உளா்த்தும் படைப்பை உருவாக்கி இருந்தாா். இதனால், இந்த ஆண்டு சிறந்த அறிவியல் படைப்புக்கான இன்ஸ்பயா் விருது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை தலைமையாசிரியா் காளியப்பன் வழங்கிப் பாராட்டினாா்.
மேலும், பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் தமிழரசி, கணினி ஆசிரியா் ராஜாமணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

அதிமுகவை யாராலும் வீழ்த்த முடியாது: கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ.
பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் இணைய தமிழக அரசுக்கு மத்திய அரசு கடிதம்

கிரேட் நிகோபாா் திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம்: காங்கிரஸ் வலியுறுத்தல்
விடியோக்கள்

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India

சூர்யவன்ஷியையும் ஆர்ச்சரையும் மட்டும் நம்புனா...: கில்லி போல் ஆடிய கில்!
Jailer -2 படத்தில் Hrithik Roshan சிறப்புத் தோற்றம்? | Cinema updates |



