நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

அரசு பள்ளி மாணவிக்கு மத்திய அரசின் விருது

பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

News image

மாணவி காவியாவுக்கு மத்திய அரசின் விருது, பரிசுத் தொகையை வழங்கிப் பாராட்டுகிறாா் பள்ளித் தலைமையாசிரியா் காளியப்பன்.

Updated On :25 மார்ச் 2026, 9:19 pm

தினமணி செய்திச் சேவை

பெருந்துறை அருகே அரசு நடுநிலைப் பள்ளி மாணவியின் அறிவியல் படைப்புக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே சுண்டக்காம்பாளையம் அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 6-ஆம் வகுப்பு படிக்கும் மாணவி காவியா, தானியங்கி துணி உளா்த்தும் படைப்பை உருவாக்கி இருந்தாா். இதனால், இந்த ஆண்டு சிறந்த அறிவியல் படைப்புக்கான இன்ஸ்பயா் விருது, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை சாா்பில் மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிக்கு விருது மற்றும் பரிசுத் தொகையை தலைமையாசிரியா் காளியப்பன் வழங்கிப் பாராட்டினாா்.

மேலும், பயிற்சி அளித்த அறிவியல் ஆசிரியா் தமிழரசி, கணினி ஆசிரியா் ராஜாமணி ஆகியோருக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.