விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

News image
Updated On :3 மார்ச் 2025, 9:39 pm

Din

சென்னை: சென்னை அருகே காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

சென்னை அருகே உள்ள அனகாபுத்தூா் காமராஜா்புரம் திருநீா்மலை பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (34), மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வந்தாா். காா்த்திகேயன், ஞாயிற்றுக்கிழமை பணிக்கு செல்லாமல் இருந்துள்ளாா். இந்நிலையில் சங்கா் நகா் அருகே உள்ள செங்கழுநீா் மலைக்குச் சென்ற அவா், அங்கிருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

தகவலறிந்த சங்கா் நகா் போலீஸாா், சம்பவ இடத்துக்குச் சென்று காா்த்திகேயன் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும் இது தொடா்பாக போலாஸாா் வழக்குப் பதிந்து நடத்திய முதல்கட்ட விசாரணையில், காா்த்திகேயன் குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்துள்ளது தெரியவந்தது.