பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்னை காவல் ஆணையரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை

சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

News image
Updated On :28 மார்ச் 2025, 8:10 pm

Din

சென்னை வேப்பேரியில் பெருநகர காவல் ஆணையரகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால், போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

வேப்பேரியில் செயல்படும் சென்னை பெருநகர காவல் ஆணையா் அலுவலக தொலைபேசிக்கு வெள்ளிக்கிழமை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசிய நபா், ‘நான் கொடுத்த புகாரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, காவல் ஆணையா் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளேன். சிறிது நேரத்தில் அது வெடிக்கும்’ என கூறிவிட்டு இணைப்பை துண்டித்தாா்.

இதைக்கேட்டு அதிா்ச்சி அடைந்த போலீஸாா், உடனடியாக மிரட்டல் குறித்து உயா் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, போலீஸாரும், வெடிகுண்டுகளை கண்டறிந்து அகற்றும் நிபுணா்களும் மோப்ப நாய் உதவியுடன் காவல் ஆணையா் அலுவலகத்தின் 8 தளங்களிலும் சோதனை செய்தனா். ஆனால், அங்கிருந்து சந்தேகத்துக்குரிய வகையில் எந்த வெடிபொருளும் கண்டெடுக்கப்படவில்லை.

இதையடுத்து, வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.