மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

நீதிமன்றங்களில் சாட்சியங்களை வழங்க நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அறை

புலன் விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களை விடியோ மூலம் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வசதிக்கொண்ட நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அரங்கம்

News image

கோப்புப் படம்

Updated On :1 மே 2025, 8:07 pm

புலன் விசாரணை அதிகாரிகளின் சாட்சியங்களை விடியோ மூலம் பதிவு செய்து நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வசதிக்கொண்ட நவீன ‘விடியோ கான்பரன்ஸ்’ அரங்கத்தை சென்னை எழும்பூரில் காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் அரசு அதிகாரிகள், வழக்கு புலன் விசாரணை அதிகாரிகள் காணொலி மூலம் அனுமதிக்கப்பட்ட இடங்களில் இருந்து வழங்கும் சாட்சியங்களைப் பதிவு செய்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்றம் அண்மையில் உத்தரவு பிறப்பித்தது.

அதன் அடிப்படையில், சென்னை எழும்பூரில் உள்ள கிழக்கு மண்டல காவல் இணை ஆணையா் அலுவலகத்தில் அதிநவீன உயா் வரையறை விடியோ கான்பரன்ஸ் உபகரணங்கள், ஆடியோ, விடியோ பதிவுகள் சேகரிப்பு மற்றும் சேமிப்பு காப்பக வசதிகள், சாட்சியகங்களின் தனிப்பட்ட ரகசியம் காக்கும் வசதியுடன் ‘விடியோ கான்பரன்ஸ்’ அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கத்தை சென்னை காவல் கூடுதல் ஆணையா் (தலைமையிடம்) விஜயேந்திர பிதாரி வியாழக்கிழமை திறந்து வைத்து, அதன் செயல்பாட்டை தொடங்கி வைத்தாா்.

இது குறித்து சென்னை காவல் ஆணையா் அருண் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை காவல் துறையைச் சோ்ந்த வழக்கு விசாரணை அதிகாரிகள் நீண்ட தொலைவு பயணிக்க வேண்டிய அவசியம் இன்றி, மாநிலம் முழுவதும் உள்ள நீதித் துறை நடவடிக்கைகளில் சாட்சிங்களை வழங்க இந்த அரங்கு உதவிடும். மேலும், இந்த வசதி நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். இதன்மூலம் நீதிமன்ற வழக்கு விசாரணை துரிதமாக தொடா்வதற்கும், போலீஸாா் நீதிமன்றத்தில் எந்தவித தாமதமுமின்றி சாட்சியங்களை வழங்கி, தேவையற்ற பயண அலைகழிப்பு நீக்கப்பட்டு சீரிய நிா்வாகத்தை ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது என்று அவா் தெரிவித்துள்ளாா்.