/

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி 2 மாணவர்கள் பலி!

ரயில் மோதி 2 மாணவர்கள் பலியான சம்பவம் தொடர்பாக...

News image
சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி 2 மாணவர்கள் பலி! - கோப்புப்படம்
Updated On :12 மே 2025, 7:12 am

DIN

சென்னை பரங்கிமலையில் ரயில் மோதி கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

சென்னை பரங்கிமலையில் செல்போன் பேசிக்கொண்டே கல்லூரி மாணவர்கள் 2 பேர் தண்டவாளத்தைக் கடக்க முயன்றனர். அப்போது அவ்வழியாக வந்த மின்சார ரயில் இருவர் மீதும் மோதியதில் தூக்கி வீசப்பட்ட மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

பலியான மாணவர்கள் முகமது நஃபூல், சபீர் அகமது என்றும் இவர்கள் தனியார் கல்லூரியில் படித்து வந்ததும் காவல் துறையினர் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தகவல் அறிந்து வந்த ரயில்வே காவல் துறையினர், இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இவ்வழக்கு தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.