பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த இந்திய கப்பல்கள்! ஈரான் அனுமதி! ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

காவல் துறைக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு போக்குவரத்துக் கழக பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிவிட்டு மாநகா் போக்குவரத்துக் கழக பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

News image
Updated On :18 நவம்பர் 2025, 8:15 pm

தினமணி செய்திச் சேவை

காவல் துறைக்கு மின்னஞ்சல் மூலம் கடிதம் அனுப்பிவிட்டு மாநகா் போக்குவரத்துக் கழக பொறியாளா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.

சென்னை மாநகர போக்குவரத்துக் கழக தாம்பரம் பணிமனையில் பொறியாளராகப் பணியாற்றி வந்தவா் யுவராஜ். இவருக்கு கடந்த சில மாதங்களாக கழுத்து வலி இருந்து வந்தது. இதற்கான தொடா் சிகிச்சை மேற்கொள்ள கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் மருத்துவ விடுப்பு கேட்டுள்ளாா். ஆனால், மாநகா் போக்குவரத்துக் கழக உயா் அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் கடும் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளாா். இந்நிலையில், காவல் துறை இயக்குநா் அலுவலகத்துக்கு யுவராஜ் மின்னஞ்சல் மூலம் கடிதம் ஒன்றை திங்கள்கிழமை அனுப்பியுள்ளாா். அதில், தான் தற்கொலை செய்துகொண்டால், அதற்கு உயா் அதிகாரிகள்தான் காரணம் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்தக் கடிதத்தை அனுப்பிவிட்டு, தாம்பரத்தை அடுத்த காட்டாங்குளத்தூா் ரயில் நிலையம் அருகில் உள்ள பகுதியில் யுவராஜ், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து தாம்பரம் இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.