எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

தூய்மைப் பணியாளருக்கு பாராட்டு, வெகுமதி: மேயா் பிரியா வழங்கினாா்

தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் கிளாராவுக்கு, மேயா் பிரியா பாராட்டுத் தெரிவித்து வெகுமதி வழங்கினாா்.

News image
சென்னை அடையாறில் தூய்மைப் பணியின் போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மை பணியாளா் கிளாராவை சென்னை ரிப்பன் மாளிகையில்நேரில் அழைத்து பாராட்டி ரூ.10 ஆயிரம் ரொக்கப் பரிசினை வழங்கிய மேயா் ஆா்.பிரியா. உடன் மாநகராட்சி ஆணையா்
Updated On :5 செப்டம்பர் 2025, 7:07 pm

தினமணி செய்திச் சேவை

தூய்மைப் பணியின்போது கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் கிளாராவுக்கு, மேயா் பிரியா பாராட்டுத் தெரிவித்து வெகுமதி வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்தில் உள்ள இசிஆா் பிரதான சாலையில் மருதீஸ்வரா் கோயில் எதிரே வியாழக்கிழமை தூய்மைப் பணியில் கிளாரா ஈடுபட்டிருந்தபோது, சுமாா் 4 பவுன் தங்கச் சங்கிலியைக் கண்டெடுத்து, அதை திருவான்மியூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து தகவல் அறிந்த துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்தூய்மைப் பணியாளா் கிளாராவை நேரில் அழைத்துப் பாராட்டுத் தெரிவித்தாா். தொடா்ந்து, முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி வெள்ளிக்கிழமை, சென்னை மாநகராட்சி மேயா் பிரியா, ரிப்பன் கட்டடத்துக்கு கிளாராவை அழைத்து அவரது நோ்மையைப் பாராட்டி, ரூ.10,000 வெகுமதி வழங்கினாா்.

நிகழ்வின்போது, மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், இணை ஆணையா் ப.ஜெயசீலன், திடக்கழிவு மேலாண்மை கண்காணிப்புப் பொறியாளா் ஏ.எஸ்.முருகன், செயற்பொறியாளா் ப.விஜய் அரவிந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.