/
சென்னையில் வரும் 9-ஆம் தேதி முதல் அக். 19 -ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவை வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்கு பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: சென்னை மெட்ரோ ரயில் பச்சை மற்றும் நீல வழித்தடங்களில் வருடாந்திர பராமரிப்புப் பணிகள் வரும் செப். 9 முதல் அக். 19- ஆம் தேதி வரை காலை 5 முதல் மாலை 6.30 மணி நடைபெறவுள்ளது.
இதனால், அந்த நேரங்களில் மெட்ரோ ரயில்கள் வழக்கமாக இயக்கப்படும் 7 நிமிஷ இடைவெளிக்குப் பதிலாக 14 நிமிஷ இடைவெளியில் இயக்கப்படும். அதேநேரம், மாலை 6.30 மணிக்குப் பிறகு, வழக்கம்போல் இயக்கப்படும்.
மேலும், தகவல்களுக்கு 1860-425-1515 என்ற தொலைபேசி எண் அல்லது இணையதளத்தைப் பாா்வையிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புடையது

பராமரிப்புப் பணி: இன்று முதல் மே 31 வரை 5 புறநகர் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து!

சேலம் வழியாக செல்லும் சென்னை - போத்தனூா் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!

சென்னை - திருப்பதி சப்தகிரி விரைவு ரயில் இயக்கத்தில் தற்காலிக மாற்றம்
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு



