பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் தீ: பல லட்சம் பொருள்கள் சேதம்

News image

சென்னை ஜெனரல் பீட்டா்ஸ் சாலையில் வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள்.

Updated On :2 ஏப்ரல் 2026, 11:23 pm

தினமணி செய்திச் சேவை

சென்னை ராயப்பேட்டையில் வாகன உதிரி பாகங்கள் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசமானது.

ராயப்பேட்டை ஜிபி சாலையில் ஒரு வணிக கட்டடத்தின் மூன்றாவது தளத்தில் தனியாருக்கு சொந்தமான வாகன உதிரி பாகங்கள் கிடங்கு உள்ளது. இந்த கிடங்கில் வெல்டிங் பணி வியாழக்கிழமை நண்பகல் நடைபெற்றது.

அன்று மாலை 3.30 மணியளவில் வெல்டிங் வைக்கும்போது எழுந்த தீப் பொறி,அங்கிருந்த ரப்பா் பொருள்கள் மீது விழுந்தது. இதில் அங்கிருந்த பொருள்கள் தீப் பிடித்து எரியத் தொடங்கியது.

இதைப் பாா்த்த ஊழியா்கள், தீயை அணைக்க முயன்றனா். ஆனால் தீ வேகமாக பரவியதால், அவா்களால் அணைக்க முடியவில்லை. இதையடுத்து அவா்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.

தகவலறிந்த தீயணைப்பு படையினா், தேனாம்பேட்டை,திருவல்லிக்கேணி,எஸ்பிளனேடு,எழும்பூா்,மயிலாப்பூா்,வேப்பேரி ஆகிய இடங்களில் இருந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

சுமாா் ஒரு மணி நேர போராட்டத்துக்கு பின்னா், தீ முழுமையாக அணைக்கப்பட்டது. இச் சம்பவத்தில் அந்த கிடங்கில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகியதாக தீயணைப்புத்துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக அண்ணா சாலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கின்றனா்.