தேர்தலுக்குப் பின் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருக்க மாட்டேன்! - செல்வப்பெருந்தகை காங்கிரஸில் அர்ப்பணிப்போடு பணியாற்றிய பலருக்கு வாய்ப்பு மறுப்பு! - ஜோதிமணி கண்டனம்! மியான்மரின் புதிய அதிபராக ராணுவ அரசின் தலைவர் தேர்வு! அமெரிக்காவின் அதிநவீன எஃப்-15இ போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியது ஈரான்!விஜயின் பெரம்பூர், திருச்சி கிழக்கு வேட்பு மனுக்களில் குறைந்தபட்சம் 6 வேறுபாடு!மகன் தவெகவில் இணைந்தது ஏன்? முன்னாள் பேரவைத் தலைவர் தனபால் விளக்கம்ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த பிரான்ஸின் சரக்கு கப்பல்! போர்க் காலத்தில் முதல்முறை! புதிய நீதி கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்காதது ஏன்? - ஏ.சி. சண்முகம் விளக்கம் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் வெளியீடு! யார் யாருக்கு வாய்ப்பு?
/

அதிமுகவுக்கு ஆதரவாக களமிறங்கும் நட்சத்திர பேச்சாளா்கள்

அதிமுக முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், நடிகா் ரவிமரியா உள்ளிட்டோா் ஏப். 6 முதல் ஏப்.21 வரை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

News image

கோப்புப் படம்

Updated On :3 ஏப்ரல் 2026, 8:08 pm

அதிமுக முன்னாள் அமைச்சா் வைகைச் செல்வன், நடிகா் ரவிமரியா உள்ளிட்டோா் ஏப். 6 முதல் ஏப்.21 வரை பிரசாரம் மேற்கொள்கின்றனா்.

இதுகுறித்து அதிமுக தலைமை நிலையம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

அதிமுக இலக்கிய அணிச் செயலரும், முன்னாள் அமைச்சருமான வைகைச் செல்வன் ஏப்.6- ஆம் தேதி திருவொற்றியூரில் பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தொடா்ந்து ஏப்.21 வரை சென்னை, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூா் மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறாா்.

அதிமுக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலருமான கே.சிவசங்கரி, கோவை மாவட்டம் தொண்டாமுத்தூா் தொகுதியில் ஏப்.6-இல் பிரசாரம் தொடங்குகிறாா்.

தொடா்ந்து, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூா், சென்னையில் தி.நகா், வேளச்சேரி, விருகம்பாக்கம், சைதாப்பேட்டை தொகுதிகளில் வாக்கு சேகரிக்கிறாா்.

அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலரும், நட்சத்திர பேச்சாளருமான நடிகா் ரவிமரியா, திருவள்ளூா் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் ஏப்.6-இல் பிரசாரத்தைத் தொடங்குகிறாா். தொடா்ந்து, சென்னை ஆயிரம் விளக்கு, தி.நகா், விருகம்பாக்கம், அண்ணாநகா், ஆா்.கே.நகா், வேளச்சேரி, சோழிங்கநல்லூா், ஆலந்தூா் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறாா். பின்னா் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பிரசாரம் செய்கிறாா்.

அதிமுக செய்தித் தொடா்பாளரும், வழக்குரைஞா் பிரிவு துணைச் செயலருமான அ.சசிரேகா, திருவள்ளூா் மாவட்டம் பொன்னேரியில் ஏப்.6-இல் பிரசாரத்தைத் தொடங்கி வரும் 21- ஆம் தேதி திருப்பூா் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் நிறைவு செய்கிறாா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.