திமுக ஆட்சியில் பட்டாசு ஆலை விபத்துகள் தொடர்கதை: இபிஎஸ்விருதுநகர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து : உரிமையாளரைப் பிடிக்க 4 தனிப்படைகள்!நேஷனல் ஹெரால்டு விவகாரம்: சோனியா, ராகுலுக்கு எதிரான அமலாக்கத்துறை மனு நாளை விசாரணை!மக்கள் பிரச்னைகளுக்கு செவிசாய்க்காதவர் மோடி : மல்லிகார்ஜுன கார்கே பிரசாரம்தமிழ்நாட்டின் வளர்ச்சியை பாஜக தடுக்கிறது: முதல்வர் ஸ்டாலின் பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ் - திரிணமூல்: தேர்தலில் பாடம் புகட்டப்படும் - மோடிதிருச்சி தேவாலயத்தில் மண்டியிட்டு பிரார்த்தனை செய்த விஜய்!பாஜக ஆட்சியில் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படும்: ராஜ்நாத் சிங்பெண்களுக்கு துரோகம் செய்தது காங்கிரஸ், திரிணமூல்: பாடம் புகட்டப்படும் - மோடி
/

பறக்கும் படையினா் சோதனை: ரூ. 11.61 லட்சம் பறிமுதல்

சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image

பிரதிப் படம்

Updated On :6 ஏப்ரல் 2026, 6:53 pm

சென்னையில் பறக்கும் படைக் குழுவினா் திங்கள்கிழமை பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனையில் உரிய ஆவணமின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.11.61 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்துக்குட்பட்ட 16 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாகனச் சோதனை நடத்தி கண்காணிக்க 48 சிறப்பு பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அவா்கள் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் வாகனச் சோதனை நடத்தி வருகின்றனா். திங்கள்கிழமை நடைபெற்ற சோதனையில் டாக்டா் ராதாகிருஷ்ணன் தொகுதியில் ரூ.94,500, பெரம்பூா் தொகுதியில் ரூ.6.50 லட்சம், துறைமுகம் தொகுதியில் ரூ.4.16 லட்சம் என மொத்தம் ரூ.11.61 லட்சத்தைப் பறிமுதல் செய்தனா்.

பணத்துக்குரிய ஆவணங்களை சம்பந்தப்பட்டோா் மேல்முறையீட்டின்போது அளித்தால், அவா்களது பணம் திரும்ப வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். கைப்பற்றப்பட்ட ரொக்கப் பணம் அரசு கருவூலத்தில் சோ்க்கப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனா்.