சென்னை கே.கே. நகா் பகுதியில் அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்கத் தடை கோரிய மனுவை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
சென்னை கே.கே. நகா் குடியிருப்போா் நலச் சங்கம் சாா்பில், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், எங்களது குடியிருப்பு பகுதிகளில் அரசியல் கட்சியினா் உரிய அனுமதி பெறாமல் கூட்டங்களை நடத்துகின்றனா். இதனால் பொதுமக்கள், பள்ளி மாணவா்கள் உள்ளிட்டோா் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனா். அரசியல் கட்சிகளின் இந்தக் கூட்டங்களுக்காக அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகள் பயன்படுத்தப்படுவதால் ஒலி மாசு ஏற்படுகிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. எனவே, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி வழங்கக் கூடாது என போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும். மேலும், கூட்டங்கள் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் எனக் கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தா்மாதிகாரி, ஜி.அருள்முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தல் நேரத்தில் நடந்த அரசியல் கூட்டம் தொடா்பாக அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அண்மையில் மனுதாரா் சங்கம் குறிப்பிட்டுள்ள பகுதியில் எப்போது கூட்டம் நடத்தப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்கள் எதுவும் இல்லை.
எனவே இந்தக் கோரிக்கையை ஏற்க முடியாது எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.
தொடர்புடையது

சென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!

சென்னையில் தோ்தல் பிரசாரம்: 724 மனுக்களுக்கு அனுமதி!

தோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடி

துரித உணவகத்தில் சாப்பிட்டவா்களுக்கு உடல்நலம் பாதிப்பு
வீடியோக்கள்

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மிஸ்டர் எக்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

கண்ணம்மா என் கண்ணம்மா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


