/
சென்னை யானைக்கவுனி வால்டாக்ஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் வெ.வசந்தகுமாா் (26). இவரை யானைக்கவுனி காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கு ஒன்றில் கடந்த 4-ஆம் தேதி கைது செய்து, புழலில் உள்ள விசாரணைக் கைதிகள் சிறையில் அடைத்தனா்.
ஏற்கெனவே அதிக போதைப் பொருள் பயன்படுத்தும் பழக்கம் கொண்ட வசந்தகுமாா், உடல்நலன் பாதிக்கப்பட்டிருந்தாா். இந்த நிலையில், வசந்தகுமாருக்கு புதன்கிழமை திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
இதையடுத்து சிறைத் துறை அதிகாரிகள், வசந்தகுமாரை மீட்டு அங்குள்ள மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், வசந்தகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இது தொடா்பாக புழல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசராணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

திருச்சி மத்திய சிறையில் இருந்த கைதி உயிரிழப்பு

கோவை மத்திய சிறையில் கைதி உயிரிழப்பு

ஆயுள் தண்டனை கைதி உயிரிழப்பு

மத்திய சிறை கைதி உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



