தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தங்கக் கட்டிகள், ரூ.44.87 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ரயில்வே பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

News image

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். - கோப்புப்படம்.

Updated On :15 ஏப்ரல் 2026, 6:09 am IST

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேலத்தைச் சோ்ந்தவரிடமிருந்து ரூ.44.83 லட்சம் ரொக்கம், 4 தங்கக் கட்டிகள் ஆகியவற்றை ரயில்வே பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, சென்ட்ரல் ரயில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஆய்வாளா் மதுசூதன ரெட்டி தலைமையில் செவ்வாய்க்கிழமை பயணிகள் உடைமைகள் சோதனையிட்டனா். அப்போது சேலத்திலிருந்து ரயிலில் சென்ட்ரல் நிலையம் வந்திறங்கிய பயணி ஜெயராஜ் (43) என்பவரிடம் 289 கிராம் மதிப்புள்ள 4 தங்கக் கட்டிகளும், பணமும் இருந்தன. அதற்கு உரிய ஆவணங்கள் அவரிடம் இல்லை. அதையடுத்து ரூ.7.50 லட்சம் மதிப்புள்ள தங்கக் கட்டிகளையும், ரூ.44.83 லட்சம் ரொக்கப் பணத்தையும் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பறிமுதல் செய்தனா்.

பறிமுதல் செய்த தங்கக் கட்டிகள், ரொக்கப் பணம் ஆகியவற்றை வருமான வரித்துறையினரிடம் ரயில்வே பாதுகாப்புப் படையினா் ஒப்படைத்ததாகவும், அதன்படி விசாரணை நடைபெற்றுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.