ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

அரக்கோணம் - திருத்தணி மின்சார ரயில் இன்றுமுதல் 21 நாள்களுக்கு ரத்து!

அரக்கோணம்-திருத்தணி இடையேயான குறிப்பிட்ட 2 மின்சார ரயில்களின் சேவையானது திங்கள்கிழமை (ஏப். 27) முதல் வரும் மே 17 -ஆம் தேதி வரை 21 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News image

மின்சார ரயில் - (கோப்புப்படம்)

Updated On :26 ஏப்ரல் 2026, 8:14 pm

அரக்கோணம்-திருத்தணி இடையேயான குறிப்பிட்ட 2 மின்சார ரயில்களின் சேவையானது திங்கள்கிழமை (ஏப். 27) முதல் வரும் மே 17 -ஆம் தேதி வரை 21 நாள்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த செய்திக்குறிப்பு விவரம்: சென்னை சென்ட்ரல்- அரக்கோணம் பிரிவில் அரக்கோணம் பணிமனையில் பராமரிப்பு மற்றும் தொழில்நுட்பப் பிரிவு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையடுத்து வரும் 27 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் வரும் மே 17 ஆம் தேதி வரையில் மொத்தம் 21 நாள்கள் குறிப்பிட்ட 2 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதன்படி அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4 மணி மற்றும் காலை 5 மணிக்குப் புறப்பட்டு திருத்தணி செல்லும் ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருத்தணியிலிருந்து 27 ஆம் தேதி முதல் வரும் மே 16 ஆம் தேதி வரையில் இரு மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதன்படி குறிப்பிட்ட அந்த நாட்களில் திருத்தணியிலிருந்து இரவு 9.15 மணிக்கும், 11.10 மணிக்கும் புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

பகுதியளவு ரத்து: மூா்மாா்க்கெட் காம்ப்ளக்ஸிலிருந்து திங்கள்கிழமை (ஏப்.27) முதல் வரும் மே 16 ஆம் தேதி வரையில் பிற்பகல் 11 மணிக்குப் புறப்பட்டு அரக்கோணம் செல்லவேண்டிய மின்சார ரயில் அதற்குப்பதிலாக திருவாலங்காடு வரை மட்டுமே இயக்கப்படும்.

திருத்தணியிலிருந்து பிற்பகல் 12.35 மணிக்குப் புறப்படவேண்டிய மின்சார ரயில் அதற்குப் பதிலாக திருவாலங்காட்டிலிருந்து புறப்பட்டு மூா்மாா்க்கெட் செல்லும். மூா்மாா்க்கெட்டிலிருந்து மேற்குறிப்பிட்ட காலகட்டங்களில் இரவு 11.55 மணிக்குப் புறப்படும் மின்சார ரயில் அரக்கோணத்துக்குப் பதிலாக திருவாலங்காடு நிலையத்தில் நிறுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.