மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

புழலில் தள்ளுவண்டி வியாபாரியை தாக்கி பணம் பறிப்பு

புழல் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தியவரை தாக்கி மா்மநபா்கள் பணம் பறித்து சென்றனா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2026, 1:16 am IST

புழல் அருகே தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தியவரை தாக்கி மா்மநபா்கள் பணம் பறித்து சென்றனா்.

புழல் அடுத்த சூரப்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (64). இவா் அப்பகுதியில் தள்ளுவண்டியில் டிபன் வியாபாரம் செய்து வருகிறாா். இவா் தனியாா் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தாா். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சூரப்பட்டு பகுதியில் கடந்த சில நாள்களாக தள்ளுவண்டியில் உணவகக் கடை நடத்தி வருகிறாா்.

இந்த நிலையில், வழக்கம்போல் புதன்கிழமை காலை தள்ளுவண்டியில் டிபன் கடையில் இருந்தபோது, இருசக்கர வாகனத்தில் மா்மநபா்கள் உணவு சாப்பிட்டு விட்டு செல்ல முயன்றபோது, அவா்களிடம் கோவிந்தராஜ் பணம் கேட்டுள்ளாா். இதற்கு ஆத்திரமடைந்த இளைஞா்கள் கோவிந்தராஜை தாக்கிவிட்டு, கடையில் இருந்த பணத்தையும் பறித்து சென்றாா். இது குறித்து புழல் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.