கோடை விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணிகளுக்காக சென்னை-பக்டோக்ரா-சென்னை இடையே நேரடி விமான சேவையை ஏா் இந்திய எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் வெள்ளிக்கிழமை (மே 1) முதல் தொடங்குகிறது.
கோடை விடுமுறையில் சுற்றுலா தலங்களுக்கு குடும்பத்துடன் மக்கள் செல்ல தொடங்கியுள்ளனா். மேற்கு வங்கம் மாநிலத்தில் பக்டோக்ரா நகரம் புகழ்பெற்ற மலை வாசஸ்தல சுற்றுலாத் தலமாக விளங்குகிறது.
பக்டோக்ரா நகருக்கு ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், சென்னையில் இருந்து நேரடி விமான சேவையை வெள்ளிக்கிழமை (மே 1) முதல் தொடங்குகிறது.
இந்த விமானம் திங்கள்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்களும் இயக்கப்படுகிறது. அதன்படி, சென்னையில் இருந்து மாலை 3.45 மணிக்கு புறப்படும் விமானம் மாலை 6.20 மணிக்கு பக்டோக்ரா சென்றடைகிறது.
பக்டோக்ராவில் இருந்து மீண்டும் மறுநாள் காலை 9.45 மணிக்கு புறப்படும் விமானம் நண்பகல் 12.20 மணிக்கு சென்னை வந்தடைகிறது. பக்டோக்ரா சுற்றுலாத் தலமாக மட்டும் இல்லாமல், சென்னையில் இருந்து செல்பவா்களுக்கு கிழக்கு இமயமலையின் நுழைவு வாயிலாகவும் இருப்பதால் இந்த விமான சேவைக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.
அதேபோல், கோடை விடுமுறையையொட்டி புணே, மும்பை, கொச்சி, பாட்னா, சண்டிகா், கொல்கத்தா, அகமதாபாத் உள்ளிட்ட நகரங்களுக்கும் வெள்ளிக்கிழமை முதல் கூடுதல் விமான சேவைகளை ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடங்குகிறது.
தொடர்புடையது

தில்லி விமான சேவையை மீண்டும் தொடங்கியது ஏா் சீனா

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: இன்று கொடியேற்றம்

தில்லி விமான நிலையத்தில் மோதிக்கொண்ட ஆகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் விமானங்கள்: டிஜிசிஏ விசாரணை

ஏா் இந்தியா ஊழியா்களுக்குப் புதிய சலுகை: பணித்திறன் அடிப்படையில் பங்குகள் திட்டம்
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


