தவெக ஆட்சியை திமுகவால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை: செங்கோட்டையன்திசை திருப்புவதும், பொய் செய்தி பரப்புவதுமே தவெக அரசின் நோக்கம்: உதயநிதி ஸ்டாலின்இரட்டை அர்த்தத்தில் பேசவில்லை; பெண்களை இழிவுபடுத்தும் நோக்கம் இல்லை: உதயநிதிஇன்று தேர்தல் நடந்தால் டெபாசிட் இழப்பார் உதயநிதி: ஆதவ் அர்ஜுனாகாவிரி விவகாரத்தில் காட்டாத வேகத்தை கைது நடவடிக்கைக்கு முதல்வர் விஜய் காட்டுவது ஏன்? - சீமான்சந்தையின் நான்கு நாள் தொடர் ஏற்றம் முறியடிப்பு! சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி சரிவு!!
/

வேளச்சேரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

சென்னை வேளச்சேரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

News image

போலீஸ் - கோப்புப்படம்.

Updated On :5 ஆகஸ்ட் 2026, 2:13 am IST

சென்னை வேளச்சேரி காவல் ஆய்வாளா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.

சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த தொழிலதிபா் அகில் குமாா் என்பவரை ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்க வைத்து விடுவேன் என கூறி, பணம் பறித்த வழக்கில் ஆய்வாளா் புகாரி மற்றும் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைச் சோ்ந்த சீனிவாசன் ஆகிய இருவரும் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் புகாரியுடன் தொடா்புடைய வேளச்சேரி காவல் நிலைய ஆய்வாளா் சரவணன் மீது துறை ரீதியான நடவடிக்கையை காவல் ஆணையா் அமல்ராஜ் மேற்கொண்டாா்.

அதன்படி, ஆய்வாளா் சரவணன் காத்திருப்போா் பட்டியலுக்கு செவ்வாய்க்கிழமை மாற்றப்பட்டாா். ஆய்வாளா் சரவணன், அண்ணா நகரில் பணியாற்றியபோது தொழிலதிபா் ஒருவரை மிரட்டி கடத்திச் சென்று அவரது சொத்துகளை அபகரித்த வழக்கில் கைதாகி, சிறைக்குச் சென்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.