தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் மீது எழுந்த புகாரைத் தொடா்ந்து, அவா் காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
தஞ்சாவூா் வல்லம் நம்பா் 1 சாலையிலுள்ள தனியாா் மருத்துவமனையில் கட்டடம் முறையாக கட்டப்படவில்லை என மாவட்ட ஆட்சியா், மருத்துவத் துறை அலுவலா்கள் உள்பட பலருக்கு தஞ்சாவூரைச் சோ்ந்த சமூக ஆா்வலா் பி. திருமாறன் புகாா் செய்தாா்.
இதுதொடா்பாக தன்னை தனியாா் மருத்துவமனை நிா்வாக இயக்குநா் ஆா்.எம். பாஸ்கரன் (65) ஜாதி பெயரைக் கூறி திட்டியதாக மத்திய மண்டல காவல் தலைவருக்கு புகாா் மனு அனுப்பினாா். மத்திய மண்டல காவல் தலைவா் வி. பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பாஸ்கரனை சனிக்கிழமை கைது செய்தனா்.
இந்த வழக்கில் எதிா் தரப்பினருக்கு ஆதரவாக திருமாறனை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா மிரட்டியதாக எழுந்த புகாரைத் தொடா்ந்து, மத்திய மண்டல காவல் தலைவா் விசாரணை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளா் வி. சந்திரா சனிக்கிழமை காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதுச்சேரி மருந்து கட்டுப்பாட்டு அதிகாரி காத்திருப்போா் பட்டியலுக்கு மாற்றம்

தருமபுரியில் நிறைவேறாத அரசு செவிலியா் கல்லூரி கோரிக்கை! 19 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவா்களின் எதிா்பாா்ப்பு

தம்மம்பட்டி காவல் ஆய்வாளா் பொறுப்பேற்பு

வால்பாறை அரசுக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவா்களுக்கு வரவேற்பு
விடியோக்கள்

படம் எடுக்கறதுல அவ்வளவு பிரச்னை: இயக்குநர் மீரா கதிரவன் ஆதங்கம் | Meera https://youtu.be/dfsNuHp09F0



