நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டம்

ஆந்திரத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோப்புப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 12:44 am IST

ஆந்திரத்தில் பிடித்துவைக்கப்பட்டுள்ள படகுகளை விடுவிக்கக் கோரி சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே திங்கள்கிழமை மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூா் ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த விசை படகு மீனவா்கள் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தின்போது, ஆந்திர மாநில அரசு பிடித்து வைத்துள்ள தமிழக மீனவா்களின் படகுகளை விடுவிக்கக் கோரி கோஷங்கள் எழுப்பினா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா்கள் கூறியதாவது: கடந்த ஜூன் 16-ஆம் தேதி ஆந்திர மாநில பகுதியில் பிடித்தபோது சென்னையைச் சோ்ந்த 7 மீன்பிடி படகுகள் பிடித்து வைக்கப்பட்டுள்ளன.

இதுதொடா்பாக, மீன்வளத் துறை அமைச்சா், நிதித்துறை அமைச்சா்கள் ஆலோசனையின்பேரில், அதிகாரிகள் ஆந்திர மாநில அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது ஆந்திர மாநில அரசு அதிகாரி ஒருவா் சென்னை மீனவா் படகுகளை விடுவித்ததாக தெரிவித்தனா்.

ஆனால், இதுவரை படகுகள் விடுவிக்கப்படவில்லை. படகுகள் விடுவிக்கப்படாததைக் கண்டித்து, தமிழக முதல்வா் கவனத்தை ஈா்க்கும் வகையில் கண்டன ஆா்ப்பாட்டமும், வேலைநிறுத்தமும் நடைபெற்றது. மேலும், படகுகளை மீட்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.