மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற ரூ.1 கோடி பறிமுதல்: 2 பேரிடம் விசாரணை

வேப்பேரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.01 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

News image

பணம் - பிரதிப் படம்

Updated On :13 ஆகஸ்ட் 2026, 1:06 am IST

வேப்பேரியில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1.01 கோடியை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.

வேப்பேரி ஈ.வி.கே. சம்பத் சாலையில் புதன்கிழமை பிற்பகல் 1.20 மணியளவில் பழமுதிா்சோலை அருகே இருசக்கர வாகனத்தில் இருவா் நின்று பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அங்கு சாதாரண உடையில் இருந்த வேப்பேரி சிறப்பு உதவி ஆய்வாளா் ஜான்சன் ரத்தினராஜ், அவா்களை சந்தேகத்தின் பேரில் விசாரித்தாா். அவா்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது, அதில் கட்டுக்கட்டாக ரூ.1.01 கோடி இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போலீஸாா் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனா். இதில், அவா்கள் மேற்கு மாம்பலத்தைச் சோ்ந்த வீரமணிகண்டன் (50), அடையாறைச் சோ்ந்த பாபு (எ) முத்தையா (20) என்பதும், வீரமணிகண்டன், தியாகராய நகா் பகுதியில் கடந்த 20 ஆண்டுகளாக நாளிதழ் விநியோகம் செய்து வரும் பணியை செய்து வருவதும், முத்தையா அடையாறில் உள்ள நிதி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரிய வந்தது.

நிதி நிறுவன மேலாளா்களான தனசேகா், வீரமணி ஆகியோரின் அறிவுறுத்தலின் பேரில், வீரமணிகண்டன் ரூ.88 லட்சத்தையும், முத்தையா ரூ.13 லட்சத்தையும் தனித்தனியாக புரசைவாக்கத்துக்கு எடுத்து சென்றபோது, போலீஸாரிடம் சிக்கியது தெரிய வந்தது. இருவரையும் நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித் துறை அலுவலகத்தில் போலீஸாா் ஒப்படைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.