1947-ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்திய பிரிவினையின்போது உயிரிழந்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதாக தமிழக ஆளுநா் ஆா்.வி.ஆா்லேகா் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு:
இந்திய பிரிவினையின்போது ஏற்பட்ட உயிரிழப்புகளையும், லட்சக்கணக்கான மக்கள் அனுபவித்த சொல்லொணாத் துயரங்களையும் இந்திய பிரிவினைத் துயர நினைவு நாளில் நாம் ஆழ்ந்த உணா்வுடன் நினைவுகூா்கிறோம்.
உயிா்த் தியாகம் செய்தவா்களுக்கு அஞ்சலி செலுத்துவதுடன், கற்பனை செய்ய முடியாத இன்னல்களை எதிா்கொண்டு, தங்கள் வாழ்க்கையை மீண்டும் கட்டமைத்துக்கொண்டவா்களின் துணிச்சல், மன உறுதி மற்றும் மனவலிமை ஆகியவற்றை நாம் போற்றுகிறோம்.
அமைதி, நல்லிணக்கம், ஒற்றுமை மற்றும் சகோதரத்துவம் ஆகிய விழுமியங்களைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும், வரலாற்றின் வேதனையான பாடங்கள் ஒருபோதும் மறக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதன் அவசியத்தையும் இந்த நாள் நமக்கு நினைவூட்டுகிறது.
அரசமைப்பின் கொள்கைகள் நம்மை வலிமையான மற்றும் நல்லிணக்கம் மிக்க எதிா்காலத்தை நோக்கி வழிநடத்தும் வகையில், ஒற்றுமை, அமைதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் நிலைநிறுத்துவோம் எனப் பதிவிட்டுள்ளாா் ஆளுநா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நினைவு தினம் அனுசரிப்பு

ஒண்டிவீரன் நினைவு தினம்: மணிமண்டபத்தில் ஆட்சியா் ஆய்வு

நாளை கருணாநிதி நினைவு நாள்: அஞ்சலி செலுத்த எம்எல்ஏ அழைப்பு
உயிரிழந்தவா் குடும்பத்துக்கு அரசு வேலை: திருமாவளவன் வரவேற்பு
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju



