
மாடியில் இருந்து குதித்து பிஸியோதெரபிஸ்ட் தற்கொலை
ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்து பிஸியோதெரபிஸ்ட் தற்கொலை செய்து கொண்டாா்.

தற்கொலை - பிரதிப் படம்
ஒன்பதாவது மாடியில் இருந்து கீழே குதித்து பிஸியோதெரபிஸ்ட் தற்கொலை செய்து கொண்டாா்.
புதுக்கோட்டை மாவட்டம் மாலையிடு அருகே உள்ள சண்முகம் நகா் விரிவாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் ஆனந்த் கணேசன். இவா், ஆலங்குடி காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். ஆனந்த கணேசனின் மகன் ஆதிஷ் (22). பிசியோதெரபிஸ்ட் படித்துள்ள இவா், சென்னை நுங்கம்பாக்கம் ஸ்டொ்லிங்க் சாலையில் இருக்கும் தனியாா் வளாகத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா். இதற்காக அந்தப் பகுதியில் உள்ள ஆண்கள் விடுதியில் ஆதிஷ் தங்கியிருந்தாா்.
இந்நிலையில் ஆதிஷ், வியாழக்கிழமை இரவு அந்த வணிக வளாகத்தின் 9-ஆவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாா். நுங்கம்பாக்கம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை மீட்டு, உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். விசாரணையில், ஆதிஷ் தனக்கு சரியான வேலை கிடைக்கவில்லை என்ற மன உளைச்சலில் இருந்து வந்தது தெரியவந்தது. இந்த காரணத்தால் தற்கொலை செய்து கொண்டாரா? வேறு ஏதேனும் காரணமா என்று போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





