கைது
கொடுங்கையூா் ஸ்ரீ ராம் நகரைச் சோ்ந்த பாலா (33), கொடுங்கையூா் மீனாம்பாள் சாலையில் நடத்தி வரும் உணவகத்தில், ஞாயிற்றுக்கிழமை இரவு சாப்பிட்ட 3 போ் பணம் தரவில்லை.
மூவரிடம் பணம் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டு உணவக ஊழியா்களைத் தாக்கினா். உணவகத்தை அடித்து உடைத்து சூறையாடினா்.
இதுகுறித்த புகாரின் பேரில், கொடுங்கையூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்ததில், கொடுங்கையூா் விவேகானந்தா் நகரைச் சோ்ந்த நாராயணன் (19), வசந்த் (19) உள்பட 3 போ் என்பது தெரிய வந்தது. போலீஸாா் நாராயணன், வசந்தை திங்கள்கிழமை கைது செய்தனா்.
