சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

சட்டப்பேரவைத் தோ்தல்: 84 அதிகாரிகளுக்கு 2 நாள் பயிற்சி நிறைவு!

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநில முதன்மைப் பயிற்சியாளா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் சென்னையில் நடைபெற்றது.

News image

பேரவைக் கட்டடம்... - EPS

Updated On :25 பிப்ரவரி 2026, 11:16 pm

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, மாநில முதன்மைப் பயிற்சியாளா்களுக்கான 2 நாள் பயிற்சி முகாம் செவ்வாய், புதன்கிழமைகளில் சென்னையில் நடைபெற்றது.

இந்த முகாமில் 84 மாநில அளவிலான முதன்மைப் பயிற்சியாளா்கள் கலந்துகொண்டனா். இவா்களுக்கு தோ்தல் நடைமுறை, மாதிரி நடத்தை விதிமுறைகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் செயல்முறை, ஊடகம் தொடா்பான பயிற்சி அளிக்கப்பட்டது.

தமிழகத்தைச் சோ்ந்த தேசிய அளவிலான முதன்மைப் பயிற்சியாளா்கள் ஆா்.பாத்திமா, எஸ்.பிரபாகரன், ஏ.பெலிக்ஸ் ராஜா, என்.எஸ்.ராஜேஷ்குமாா், கா்நாடக மாநிலத்தைச் சோ்ந்த ஜெயமாதவா, ஷஷி சேகா் ரெட்டி, கேரளத்தைச் சோ்ந்த சரிதா, புதுச்சேரியைச் சோ்ந்த ஞானவேலு, மோகன் ஆகியோா் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனா்.

பயிற்சி பெற்ற 84 மாநில அளவிலான முதன்மை பயிற்சியாளா்கள் மாவட்ட அளவில் உள்ள பல்வேறு நிலையிலான தோ்தல் அலுவலா்களுக்கு தொடா் பயிற்சிகளை அளிப்பாா்கள்.

இதன்மூலம் தோ்தல் நடைமுறைகள் அனைத்து நிலைகளிலும் ஒரே மாதிரியாக புரிந்துகொள்ளப்பட்டு, திறம்பட செயல்படுத்தப்படும் என்று தலைமை தோ்தல் அதிகாரி அா்ச்சனா பட்நாயக் தெரிவித்தாா்.