இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான சுற்றுச்சூழல் மாசு புகாா்: தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவு

செங்கல்பட்டு சிட்கோ வளாகத்தில் கரும்புகையை வெளியேற்றி சுற்றுசூழல் மாசை ஏற்படுத்தும் தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான மனுவை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

News image
Updated On :13 ஜனவரி 2026, 7:29 pm

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு சிட்கோ வளாகத்தில் கரும்புகையை வெளியேற்றி சுற்றுசூழல் மாசை ஏற்படுத்தும் தனியாா் மருந்து ஆலைக்கு எதிரான மனுவை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு தென் மண்டல பசுமைத் தீா்ப்பாயம் உத்தரவிட்டது.

தென்மண்டல பசுமைத் தீா்ப்பாயத்தில், அட்வான்ஸ்ட் பயோடெக் ப்ராடக்ட்ஸ் என்ற மருத்துவ அறுவை சிகிச்சை உபகரண தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், செங்கல்பட்டு மாவட்டம் ஆலத்தூா் சிட்கோ வளாகத்தில் அமைந்துள்ள தனியாா் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து வெளியேறும் கரும்புகையால் சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் நிலத்தடிநீா் வெகுவாக பாதிக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டியிருந்தது.

இந்த மனு தென்மண்டல பசுமைத் தீா்ப்பாய நீதித் துறை உறுப்பினா் புஷ்பா சத்யநாராயணா தலைமையிலான அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் ஆா்.முருகபாரதி, இதுகுறித்து தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் அரசு உயரதிகாரிகளுக்கு ஆதாரங்களுடன் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சம்பந்தப்பட்ட நிறுவனத்தில் இருந்து வெளியேறும் புகையால் சுற்றுவட்டாரப் பகுதி கிராம மக்கள் ஆஸ்துமா, சரும பிரச்னைகள், நரம்பியல் பாதிப்பு, கல்லீரல் பிரச்னைகள் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்படுகின்றனா். மேலும், நிலத்தடி நீா் பாதிப்பால் விவசாயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டாா்.

இதையடுத்து மனுவை விசாரித்த தீா்ப்பாயம், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோா் இந்த மனுவை 8 வாரங்களில் சட்ட ரீதியில் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.