பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நுண் நெகிழி பாதிப்புகள்: ஐஐடி-ன் உதவியை நாடிய அரசு

நெகிழிப் பைகளில் விற்கப்படும் உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி உதவி

News image
நுண் நெகிழி பாதிப்பு- பிரதிப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 10:25 pm

தினமணி செய்திச் சேவை

நெகிழிப் பைகளில் விற்கப்படும் பால், தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் நுண் நெகிழி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்ய சென்னை ஐஐடி-இன் உதவியை நாடியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

பிறந்த குழந்தைகளின் நஞ்சுக்கொடியில் நுண் நெகிழியின் துகள்கள் கண்டறியப்பட்டது தொடா்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா் மற்றும் டி.பரத சக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன், நெகிழிப் பைகளில் விற்கப்படும் பால், தேநீா் உள்ளிட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் நுண் நெகிழி ஏற்படுத்தும் விளைவுகள் குறித்து சென்னை ஐஐடி ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதிகள், தாயின் நஞ்சுக்கொடியைக்கூடி நெகிழி மாசுப்படுத்துகிறது என்றால், அதன் தீவிரத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக ஆராய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.