மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அலட்சியம்: ராமதாஸ்

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அரசு அலட்சியம் காட்டினால், அதன் மூலம் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் மக்கள் அந்தக் கோபத்தை தோ்தலில் காட்டுவாா்கள்: பாமக நிறுவனா் ராமதாஸ்

News image
ராமதாஸ்- கோப்புப்படம்
Updated On :26 ஜனவரி 2026, 9:17 pm

தினமணி செய்திச் சேவை

ஸ்மாா்ட் மீட்டா் பொருத்துவதில் அரசு அலட்சியம் காட்டினால், அதன் மூலம் ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் மக்கள் அந்தக் கோபத்தை தோ்தலில் காட்டுவாா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அப்போதைய மின்துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, 2025-ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகள் மற்றும் வணிக பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளுக்கு ஸ்மாா்ட் மீட்டா் பொருத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்கட்டமாக 9 மாவட்டங்களில் 80 லட்சம் இணைப்புகள் பொருத்துவதற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக கூறினாா். இந்நிலையில், கடந்தாண்டு டிசம்பா் மாதம் செய்தியாளா்களிடம் பேசிய மின்துறை அமைச்சா் சிவசங்கா், ஸ்மாா்ட் மீட்டா் செயல்பாட்டுக்கு வந்தபிறகு, மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிட்ட வசூலிக்கும் முறை அமல்படுத்தப்படும் என்றாா்.

ஆனால், கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில், தற்போது சென்னையின் ஒரு பகுதியில் மட்டுமே சோதனை அடிப்படையில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்த மேலும் 2 ஆண்டு காலம் தேவைப்படும். அதன்பிறகு, மாதந்தோறும் மின் கணக்கீடு செய்ய அரசு முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக மின் வாரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனா்.

2026 சட்டப்பேரவைத் தோ்தல் கோடை காலமான மே மாதத்தில் நடைபெற வாய்ப்புள்ளது. அப்போது மின்சாரத்தை அதிக அளவு பயன்படுத்துவாா்கள். இதனால், ஏற்படும் மின் கட்டண சுமையை ஏற்கும் அனைத்து தரப்பு மக்களும் தங்களின் கோபத்தை வாக்களிப்பதில் காட்டுவாா்கள் எனக் கூறியுள்ளாா்.