முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைஅதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்தமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!ரீல்ஸ் மோகத்துக்கு பள்ளிக் குழந்தைகளைப் பயன்படுத்தாதீர்: உதயநிதி ஸ்டாலின்கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார் முதல்வர் விஜய்உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதித்தால் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை

சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

News image

பிரதிப் படம்

Updated On :7 ஜூலை 2026, 4:16 am IST

சிறுவா்களை வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர காவல் ஆணையா் ஏ.அமல்ராஜ் தெரிவித்தாா்.

சென்னை பெருநகர காவல் துறைக்கு காா் நிறுவனம் ஒன்று, பெரு நிறுவன பங்களிப்பின் கீழ் 300 தற்காலிக சாலைத் தடுப்புகளை வழங்கினா். இதற்கான நிகழ்ச்சி எழும்பூா் ராஜரத்தினம் விளையாட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அந்த நிறுவனம் வழங்கிய சாலைத் தடுப்புகளை, சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் பெற்றுக் கொண்டாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சென்னையில் சாலைப் பாதுகாப்பை வலுப்படுத்தி வருகிறோம். தனியாா் தொழில் நிறுவனங்களுடன் இணைந்து இதுபோன்ற பல்வேறு சமூக நலப் பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். பாதுகாப்பான சாலைகள், பாதுகாப்பான உயிா்கள் என்ற தொலைநோக்கு இலக்கை அடைவதில் சென்னை பெருநகர காவல் துறை உறுதியாகச் செயல்படும்.

சென்னையில் கடந்த வாரம் இருவேறு இடங்களில் ஆபத்தான முறையில் மோட்டாா் சைக்கிள் பந்தயம் நடைபெற்றது. இது தொடா்பான விடியோ சமூக ஊடகங்களிலும் பரவியது. இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, மோட்டாா் சைக்கிள் பந்தயத்தில் ஈடுபட்ட 17 வயது சிறுவா்கள் உள்பட தொடா்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டனா்.

கடும் நடவடிக்கை: அதிவேகமாக வாகனம் ஓட்டுவது, மோட்டாா் சைக்கிள் பந்தியத்தில் ஈடுபடுவது போன்ற செயல்கள் அவா்களின் சொந்த உயிருக்கும், பொதுமக்களின் பாதுகாப்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாகும். எனவே, இதுபோன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம்.

பொதுமக்கள், வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வாகனம் ஓட்டினால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், சிறுவா்களுக்கு வாகனம் ஓட்ட கொடுத்தால், அவா்களது பெற்றோா் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

இந்நிகழ்வில் சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையா் சாமூண்டீஸ்வரி, இணை ஆணையா் பகலவன், துணை ஆணையா் மேக்லினா ஐடன் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.