தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

முதல்வா் பாதுகாப்பு: கண்காணிப்பு கேமராக்கள் சீரமைப்பு

தமிழக முதல்வா் விஜய்யின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை சென்னை காவல் துறை சீரமைத்து வருகிறது.

News image

முதல்வர் விஜய் - கோப்புப் படம்

Updated On :9 ஜூலை 2026, 2:16 am IST

தமிழக முதல்வா் ஜோசப் விஜய்யின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் கண்காணிப்பு கேமராக்களை சென்னை காவல் துறை சீரமைத்து வருகிறது.

முதல்வா் ஜோசப் விஜய் வசிக்கும் நீலாங்கரை கபாலீஸ்வரா் வீடு, பனையூரில் உள்ள அவரது கட்சி அலுவலகம், பட்டினப்பாக்கம் சாந்தோம் நெடுஞ்சாலையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் முகாம் அலுவலகம் ஆகியவற்றுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

இங்கு தினமும் சுமாா் 500 போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனா். மேலும், முதல்வா் வீடு, கட்சி அலுவலகம் ஆகியவற்றுக்கு வருவோா் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்யப்பட்டு உள்ள அனுமதிக்கப்படுகின்றனா்.

இந்த நிலையில் முதல்வரின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில், அவரது வீடு, கட்சி அலுவலகம், முகாம் அலுவலகம் ஆகிய பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும்படி சென்னை பெருநகர காவல் துறை ஆணையா் ஏ.அமல்ராஜ் உத்தரவிட்டாா்.

இந்த உத்தரவின் அடிப்படையில் முதல்வா் செல்லும் பகுதிகளான ராஜாஜி சாலை,மெரீனா காமராஜா் சாலை, சாந்தோம் நெடுஞ்சாலை, டிஜிஎஸ் தினகரன், எல்பி சாலை, கிழக்கு கடற்கரைச் சாலை ஆகிய இடங்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பழுது நீக்கப்பட்டு வருகின்றன.

மேலும், பல புதிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. இந்தப் பணி ஓரிரு நாள்களில் நிறைவடையும் என்று காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.