தமிழக ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க தவெக அரசு விரும்பவில்லை: அமைச்சா் பெ. விஸ்வநாதன் பேட்டி
தமிழகத்தில் ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடிக்க முதல்வா் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி ஆட்சி விரும்பவில்லை என்று உயா் கல்வித் துறை அமைச்சா் பெ. விஸ்வநாதன் கூறினாா்.

புதுச்சேரி காங்கிரஸ் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும் தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் பெ.விஸ்வநாதன். உடன் தமிழக சுற்றுலாத் துறை அமைச்சா் செ.ராஜேஷ்குமாா், புதுச்சேரி காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி உள்ளிட்டோா்.







