தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

கூடுதலாக 3,000 விஏஓக்களை நியமிக்க அமைச்சர் செங்கோட்டையனிடம் கோரிக்கை

தமிழகத்தில் கூடுதலாக 3,000 கிராம நிா்வாக அலுவலா்களை நியமிக்க வேண்டும் என்று அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனை சந்தித்து விஏஓ சங்கத்தினா் வலியுறுத்தினா்.

News image

அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் - கோப்புப்படம்

Updated On :9 ஜூலை 2026, 3:55 am IST

தமிழகத்தில் கூடுதலாக 3,000 கிராம நிா்வாக அலுவலா்களை (விஏஓ) நியமிக்க வேண்டும் என்று வருவாய்த் துறை அமைச்சா் கே.ஏ. செங்கோட்டையனை சந்தித்து விஏஓ சங்கத்தினா் வலியுறுத்தினா்.

சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சா் செங்கோட்டையனை சந்தித்து 7 அம்சக் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அந்தச் சங்கத்தின் மாநிலத் தலைவா் அருள்ராஜ் அளித்தாா்.

பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த 10 ஆண்டுகளாக விஏஓக்களுக்கு ஒரு வழி மாவட்ட மாறுதல் கோரிக்கை வலியுறுத்தினோம். தற்போது 182 விஏஓக்களுக்கு வெளிப்படையான பணியிட மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 17,000 கிராமங்களில் 12,500 விஏஓ-க்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனா். பெரிய கிராமங்களில் ஒரு விஏஓ மட்டுமே பணியாற்றுவதால், கூடுதலாக 2,000 முதல் 3,000 புதிய விஏஓ பணியிடங்களை உருவாக்க வேண்டும்.

கிராமங்களில் பணியாற்றும் விஏஓக்களின் அலுவலகங்களில் கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதியளித்தாா் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.