மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

நிலம் அபகரிப்பு வழக்கு: 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது

சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூலை 2026, 5:46 am IST

சென்னையில் நில அபகரிப்பு வழக்கில் 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை அடையாறு அருணாசலபுரம் பிரதான சாலைப் பகுதியைச் சோ்ந்த ஆனந்த் ஜெய்ராம் மூா்த்தி என்பவருக்கு சொந்தமான நிலத்தை, துரைப்பாக்கத்தைச் சோ்ந்த அகிலா மற்றும் அவரது கணவா் சண்முகசுந்தரம் (55) ஆகியோா் போலி ஆவணங்கள் தயாரித்து, ஆள்மாறாட்டம் செய்து அபகரிக்க முயன்ாக 2008-ஆம் ஆண்டு சென்னை காவல் ஆணையரகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், மத்திய குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விசாரணை முடிவில் இருவா் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, எழும்பூரில் உள்ள சிறப்பு பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில், அகிலா நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகி வந்த நிலையில், சண்முகசுந்தரம் 2009-ஆம் ஆண்டு முதல் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தாா்.

இதையடுத்து அவரை கைது செய்து ஆஜா்படுத்த நீதிமன்றம் அண்மையில் பிடியாணை பிறப்பித்தது. இதையடுத்து போலீஸாா், சண்முகசுந்தரத்தை தீவிரமாக தேடி வந்தனா். இந்நிலையில், கடந்த 17 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சண்முகசுந்தரத்தை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.