சென்னை மாநகராட்சியில் இரவு நேரங்களில் சாலைகளில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் அறிவுறுத்தியுள்ளாா்.
சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டட வளாகத்தில் திடக்கழிவு மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்று அவா் பேசியதாவது:
சென்னை மாநகரில் குப்பைகளைத் தரம் பிரித்து வழங்கும் வகையில் குடியிருப்புப் பகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். கட்டட இடிபாட்டுக் கழிவுகளை முறையாக அகற்றி மறுசுழற்சிக்குட்படுத்தும் பணியை மேற்கொள்வது அவசியம்.
சுத்தமான, பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டு நெறிமுறைகளை சம்பந்தப்பட்டோா் மற்றும் கட்டுமான நிறுவனத்தினா் பின்பற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும். அதை மீறுவோருக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்வது அவசியம்.
மாநகரில் பேருந்து நிறுத்தங்கள், மயானம், பூங்காக்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இரவு நேரங்களில் சாலைகளில் இயந்திரப் பெருக்கிகளைப் பயன்படுத்தி தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவேண்டும் என்றாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் இணை ஆணையா் செ.சரவணன் (பணிகள்), வட்டார துணை ஆணையா்கள் ஸ்வேதா சுமன், எச்.ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராஜஸ்தான்: தூய்மைப் பணியாளா்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட அமைச்சா்
சென்னை வந்த இண்டிகோ விமானத்தில் இயந்திர கோளாறு

மாநகராட்சி தூய்மைப் பணிகள் : ஆணையா் ஆய்வு

அதிகாரிகள் அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்பட வேண்டும்: மேயா் பிரியா
விடியோக்கள்

Vishwanath And Sons Review | காதலில் வயது வித்தியாசம் ஒரு பிரச்னையா? | Suriya | Mamitha Baiju


