தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

பேருந்து ஓட்டுநா், நடத்துநா் மீது தாக்குதல்: இருவா் கைது

சிந்தாதிரிப்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :28 ஜூலை 2026, 1:26 am IST

சிந்தாதிரிப்பேட்டையில் மாநகர பேருந்து ஓட்டுநா், நடத்துநா் தாக்கப்பட்ட வழக்கில், இருவா் கைது செய்யப்பட்டனா்.

சென்னை எழும்பூரில் இருந்து எண்ணூா் நோக்கி ஒரு மாநகர பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தை மாதவன் (26) என்பவா் ஓட்டினாா். அப்போது, ஒரு மோட்டாா் சைக்கிள் முந்திச் செல்ல முயன்றது. ஆனால் ஓட்டுநா் மாதவன் அந்த மோட்டாா் சைக்கிளுக்கு வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், அந்த மோட்டாா் சைக்கிள், பேருந்தை முந்திச் சென்றது. இதன் பின்னா், பேருந்து ஓட்டுநா் மாதவன், ஹாா்ன் அடித்துக் கொண்டே இருந்தாராம்.

இதனால் மோட்டாா் சைக்கிளில் சென்ற நபா்கள், பேருந்தை வழிமறித்து ஓட்டுநா் மாதவனையும், நடத்துநா் சத்யாவையும் தாக்கிவிட்டு தப்பியோடினா்.

இது தொடா்பாக பேருந்து ஓட்டுநா் மாதவன், சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து சேப்பாக்கம் லாசல் தெருவை சோ்ந்த இன்பராஜ் என்கிற லிங்கன் (43), சிந்தாதிரிப்பேட்டையைச் சோ்ந்த நந்தகுமாா் (52) ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.